About Me

கனவுகளுக்குள்
கவலைகளை புதைத்து
கடிகார முட்களாய்
காலந்தள்ளும்
சராசரி மனிதன் நான்...

நம்பிக்கை கொள்வதிலெல்லாம்
நம்பிக்கையில்லை எனக்கு...

ஏமாற்றங்களும்
ஏளனங்களும்
எனக்கு புதிதில்லை...

எதிரிகள்
எப்போதாவது நண்பனாகலாம்...
ஏற்றுக்கொள்வேன் நான்...!
நண்பன்
நாளை எதிரியாகலாம்...
நான் தாங்கிக்கொள்வேன்...!

விடியம் என்று நான்
விழி மூடுவதில்லை...
மரணத்தை கண்டு கூட
மனம் ஏனோ பயம் கொள்ளவில்லை....

கவிதைகளை
காதலிக்கிறேன்...!
கூடவே
சில நினைவுகளையும்....

நீங்கள்
சிலுவைகளை கொடுத்தால்
சுமப்பதற்கும்,
சிறகுகளை கொடுத்தால்
பறப்பதற்கும்
என் தோள்களுக்கு நான்
கற்றுக்கொடுத்திருக்கிறேன்...

பாதைகள் தேடும்-இந்த
பயணங்களில்
தொலைப்பதற்கு
என்னிடம் எதுவுமில்லை..!
என் இரும்பு இதயத்திற்க்குள்
துருபிடித்துக்கொண்டிருக் கும்
சில ஆசைகளை தவிர...

என் வாழ்க்கை பாதைகளில்
என்றாவது ஒரு நாள்
என் சுவடுகளை பதிப்பேன்
என்ற தன்னம்பிக்கையில்
என் பயணத்தை
தொடர்ந்து கொண்டிருக்கிறேன்..!!
அனீஷ் என்கிற நான்...........



Click Here To Go Home